கல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன் ஆனால் அன்பால அடித்தார்கள் என பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
Balaji Murugadoss About Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான்.
பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களும் சண்டையிட்டு தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்தவர். ஆனாலும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கரடுமுரடாக நடந்து கொண்டதால் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என நினைத்தேன்.
வெளியே வந்தபிறகு கல்லடிபடும் என நினைத்தேன் ஆனால் அன்பால் தான் அடித்துள்ளார்கள். என்னையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என் குணத்தை விரும்புவார்கள் நான் பைனல் வரை செல்வேன் என நான் கொஞ்சம் நினைக்கவில்லை.
அங்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி என பேசியுள்ளார் பாலாஜி.