சினேகா முதன் முதலாக காதலித்தது பிரசன்னாவை இல்லை என பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Bailwan About Sneha Marriage Life : தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வந்தவர் சினேகா. இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சினேகா மற்றும் பிரசன்னாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இறுதியாக பட்டாசு படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.
இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் பேட்டி ஒன்றில் நடிகை சினேகா முதலில் பிரசன்னாவை திருமணம் செய்வதாக இல்லை அவருக்கு முன்னதாக அவர் ஒரு தயாரிப்பாளரை தான் திருமணம் செய்ய இருந்தார்.
அவருடைய நடவடிக்கைகள் சரி இல்லை என்பதால் சினேகா அந்தத் திருமணத்தை நிறுத்தி விட்டார். அதன் பின்னர் தான் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என கூறியுள்ளார்.
இந்த பயில்வான் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் அனுஷ்காவுக்கு திருமணம் என பல பிரதிகளே அளித்தார் ஆனா அந்த பேட்டிகள் அனைத்துமே பொய்யான தகவல்களை இங்கு சம்மந்தப்பட்ட நடிகைகள் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த வகையில் இவர் சினேகா குறித்துப் பேசி இருக்கும் இந்த தகவலும் பொய்யாக இருக்குமோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பயில்வான் அவர்களுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அவர் அளிக்கும் பேட்டிகளில் நடிகைகள் குறித்து அவதூறாகப் பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.