Kerala 144 : கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவிலான, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 17- ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் பெண்கள் செல்ல கூடாது என பெரும் போராட்டம் நடத்தினர்.
மேலும், கோவிலுக்கு சென்ற பெண்களையும் போராட்டம் செய்து திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட 5 நாட்கள் பம்பை, நிலக்கல் , சபரிமலையில் போர்க்களம் போல காட்சியளித்தது.
கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் இறுதிவரை அனுமதிக்கப்படவில்லை.
மேலும் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தி, பம்பை, நிலக்கல், சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கேரள போலீசார் , 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், வரும் திங்கள் கிழமை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கள், நில்லக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், ஒன்றாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு அசம்பாவிதமும் இந்தமுறை நடைபெறாமல் இருக்கவும், சிறப்பு பூஜைக்காகவும், வன்முறைகளை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.