கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை மிரட்டி பாலியல் பலாதகரம் செய்து வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Auto driver who soiled many girls life is arrested – சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதிகளில் வசிப்பவர் மோகன்ராஜ். இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். மேலும், அந்த பகுதியில் ஒரு கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். ஆனால் , இவரின் காம இச்சைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் இருவருமே இவரை விட்டு பிரிந்து விட்டனர். இவர் காக்காபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இரவு நேரங்களில் தன்னுடன் தனிமையாக ஆட்டோவில் வரும் கல்லூரி பெண்கள் மற்றும் பெண்களுடன் பேச்சு கொடுத்து அவருடன் நட்பாக பழகி, அதன்பின் வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அதை பதிவு செய்து அவர்களை தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதில் சிலரை நண்பர்களுக்கும் இரையாக்கியுள்ளார். சில பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தியுள்ளார்.
ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில், சேலம் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இவரது செல்போனை சோதனை செய்த போலீசார் பல பெண்களை மிரட்டி அடித்து உதைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்த செய்த காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
என் படத்த தூக்கிடாதீங்க.. தியேட்டர் அதிபர்களுக்கு பார்த்திபன் கோரிக்கைச்
இவரது தொல்லை தாங்க முடியாமல் பல பெண்கள் சேலத்தை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால் இவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் கலக்கமடைந்துள்ளனர். இவரோடு சேர்ந்து இவரது நண்பர்கள் சிலரும் இதே மாதிரி பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டவுடன் அப்பகுதியில் சில ஆட்டோ ஓட்டுநர்களும் மாயமாகி உள்ளனர். எனவே அனைவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். நேற்று இரவு மோகன்ராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் எத்தனை பெண்களை கற்பை பறிகொடுத்தார்கள் என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்பே தெரியவரும்.