ஷாருக்கானுடன் அட்லி இணைய உள்ள அடுத்த படம் பற்றிய மாஸான சீக்ரெட் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Atlee‘s Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். என்னதான் அட்லி மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி கண்டன.
விஜயை வைத்து 3 படம் இயக்கியும் அட்லிக்கு வந்த சோதனை?? – வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது அட்லி இந்த படத்தின் கதையை முழுமையாக ஷாருக்கானிடம் கூறி விட்டதாகவும் அடுத்த வருட பாதியில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் இந்த படம் பற்றிய ஒரு சில சீக்ரெட் தகவல்களும் கசிந்துள்ளது. அதாவது ஷாருக்கான் இப்படத்தில் அண்டர் கவர் போலீசாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. ஷாருக்கான் படத்தை இயக்கி முடித்த பிறகு தளபதி விஜய்யை வைத்து அட்லி மீண்டும் ஒரு படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.