ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க ரூ.180 கோடி செலவில் உருவான திரைப்படம் பிகில். இப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆஹோ ஓஹோவென பாராட்டுவதை பார்க்க முடிகிறது. காரனம், விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தக்கூடிய பல காட்சிகள் இப்படத்தில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், படத்தின் காட்சிகள் விஜய் ரசிகர்கள் விரும்பும் வகையிலேயே இப்படத்தின் பெரும்பாலன காட்சிகளை அட்லீ அமைத்துள்ளார்.
ஆனால், திரைப்படம் பார்க்க வரும் பொதுவான ரசிகர்களை அட்லீ மனதில் வைத்து காட்சிகளை அமைத்தாரா என்றால் இல்லை என்றுதான் கூற தோன்றுகிறது.
பிகில் திரைப்படம் போஸ்டரில் மட்டுமே முழுக்க முழுக்க விளையாட்டை மையமாக கொண்டுள்ளது. ஆனால், படத்தை பார்த்தால் வழக்கமான விஜய் படத்தில் வரும் தொடக்கப் பாடல், ராயப்பன் விஜயின் ரவுடியிசம், அந்த கதாபாத்திரத்திற்கான ஹீரோயிசம், அவருக்கான பகை, நயன்தாராவுடன் மகன் விஜய் செய்யும் ரொமான்ஸ் என கதை போகிறது. படத்தின் 2ம் பாதியில் தான் விளையாட்டு வருகிறது.
விளையாட்டு தொடர்பான கதையில் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை திணிக்கும் போது அவருக்கான மாஸ் காட்சிகளை அமைப்பது பற்றித் தான் யோசிக்க முடியும். அட்லீயும் அதைத்தான் செய்துள்ளார்.
இதனால் கதைக்கு நேர்மையில்லாமல் போகும் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பிகிலில் இதுதான் நடந்துள்ளது. இது விஜய் படமா இல்லை விளையாட்டு படமா என்றால், பிகில் விஜய் படமாகவே வெளிவந்துள்ளது.
அதனால்தான் விளையாட்டை மையமாக கொண்டு இதற்கு முன் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு, சக்தே இண்டியா, கனா போன்ற திரைப்படங்களில் இருந்த வலுவான கதை, திரைக்கதை மற்றும் இப்படங்களை பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஏற்படும் பாதிப்பு பிகில் படத்தில் இல்லை என்பது நிதர்சனம்.