Arjun Sampath Speech :
திருச்சி: ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார்..
ஸ்டாலினை தோற்கடிப்பார்.. என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் ஸ்டாலினை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் அரசியல் வருகையை தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டது என்றே கூறலாம்.., நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளர் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் என சொல்லப்படுவர். அவர் அடிக்கடி ரஜினி குறித்து அரசியலுக்கு வருவார் என கூறிவருபவர்.
இந்நிலையில் “எனது கணிப்புப்படி ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் துணை நிற்போம். மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம்.
எங்கள் ஆதரவு ரஜினிகாந்த் அவர்களுக்கே…! ” என கூறியுள்ளார். மேலும் அரசியலுக்குள் வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் தயங்கிய காலம் மலையேறிவிட்டதாகவும் , விரைவில் அரசியலுக்குள் நுழையப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடிக்கடி பேசி வரும் அர்ஜுன் சம்பத்., இப்போது மீண்டும் அதே கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை ஸ்டாலினை கிண்டல் செய்து ரஜினியின் அரசியல் வருகையை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் இவ்வாறு ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இந்திப் படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் மற்றும் ஸ்டாலினுடைய மருமகன் நடத்தக்கூடிய ஸ்கூல்களில் இந்தி உள்ளது. மேலும் அவரது பேரன் பேத்திங்க எல்லாம் இந்தி பயில்கின்றனர்..
இவ்வாறு இருக்கையில், எத்தனை நாளைக்கு தமிழ்லேயே வியாபாரம் பண்ணுவீங்க? அதை எதிர்த்து நாங்க போராட்டம் நடத்த போறதா சொன்னோம். ஆனா, இதை அறிந்த ஸ்டாலின் பின் வாங்கிவிட்டார். இந்தி மொழி விஷயத்தில் நடிகர் ரஜினி தன் கருத்தை தெளிவாக கூறிவிட்டார். அவர் கட்டாயம் அரசியலுக்கு வருவார்.. என தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார். ஆட்சியை பிடிப்பாரு.. ஸ்டாலினை தோற்கடிப்பார்..! இதனால் தான் திமுகவில், ரஜினி அரசியலுக்கு வருவாரா.. ரஜினி வருவாரா.. என்று பயந்து காத்திருக்கின்றனர். இவ்வாறு ஸ்டாலினை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத்