Arjun Praises PT Selvakumar
Arjun Praises PT Selvakumar

விஜய் பட தயாரிப்பளர் பிடி செல்வகுமார் சேவையை பாராட்டி ஆக்சன் கிங் அர்ஜுன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Arjun Praises PT Selvakumar : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் பிடி செல்வகுமார்.

பத்திரிக்கையாளர், பிஆர்ஓ, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். மேலும் இவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

புகைப்பட வீடியோ கலைஞர்கள் 140 பேருக்கு அரிசி மூட்டைகள் கலப்பை மக்கள் இயக்கத்துடன் இமான் அண்ணாச்சி வழங்கினார்!

சீனாவில் தோன்றி தற்போது இந்தியாவிலும் பரவி வரும் குரானா வைரஸ் தாக்கத்தால் பல ஆயிரம் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பல குடும்பங்கள் வேலையில்லாமல் அன்றாட உணவிற்கே அல்லாடி வருகின்றனர்.

இதனால் பிடி செல்வகுமார் இ-கலப்பை மக்கள் இயக்கம் பலதரப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பர்மா அகதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பெண் ஆட்டோ தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் என கஷ்டப்படும் ஒவ்வொருவரையும் அறிந்து அவர்களுக்கு தேவையான உதவியைச் செய்து வருகிறது.

இதனையறிந்த ஆக்சன் கிங் அர்ஜுன் ஆடியோ பதிவு ஒன்றின் மூலமாக தயாரிப்பாளர் பிடி செல்வகுமாரின் சேவை மனப்பான்மையை பாராட்டியுள்ளார்.

குமரி மக்களுக்காக நலதிட்ட உதவிகளை செய்து குரல் கொடுத்த தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார்.!

அந்த ஆடியோ பதிவில் ஹாய் செல்வகுமார் உங்களை எனக்கு ஒரு PRO-வாகத் தான் தெரியும். இப்போ சமுதாயத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்களை செய்து வருகிறீர்கள். சமூகத்திற்காக குரல் கொடுக்கிறீர்கள். உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் கடவுள் அனைத்து நலனையும் ஆரோக்கியத்தையும் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

PT Selvakumar Request to CM
PT Selvakumar Request to CM