மீண்டும் அந்த நாட்கள் எப்போது வரும் என அர்ச்சனா புகைப்படத்தை வெளியிட்டு புலம்பியுள்ளார்.
Archana Missing Her Shooting Days : எப்எம் ரேடியோவில் தொகுப்பாளினியாக ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் அர்ச்சனா. டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் படங்களிலும் இவர் அவ்வப்போது தலை காட்டத் தொடங்கியுள்ளார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஷூட்டிங் நடத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அனைத்து பிரபலங்களும் வீடுகள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தொகுப்பாளினி அர்ச்சனா மீண்டும் அந்த நாட்கள் எப்போது வருமென புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சூட்டிங் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் இவர் என் மகளுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய குழந்தை புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.