பிகில் திரைப்படம் படைத்த சாதனை பற்றி ட்வீட் செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது.
படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிறது, இன்னும் பல தியேட்டர்களில் பிகில் திரைப்படம் ஓடி கொண்டிருக்கிறது, 50-வது நாளை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி 2019-ல் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக பிகில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி. என கூறி படக்குழுவினருக்கு ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.
இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடத்தில் இறங்கியுள்ளனர்.
As Bigil completes 50 days at the box office to become the highest grossing Tamil movie of the year across the world we would like to thank each every one of you who loved the film and watched it in theaters near you ???????????? #TeamBigil
— Archana Kalpathi (@archanakalpathi) December 13, 2019