சொல்வதற்கு வார்த்தையே இல்லை என கர்ணன் படம் குறித்து விஜய் படத்தயாரிப்பாளர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Archana Kalpathi Review on Karnan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற உத்தரவுடன் எத்தனை படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் கர்ணன் திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சொல்றதுக்கு வார்த்தையே இல்ல, நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த பீல். படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.