AR Murugadoss Kept Darbar Story Secret :
தன் படங்களின் கதை ரிலீஸுக்கு முன்பே கசிந்து கதை திருட்டு விவகாரத்தில் சிக்குவதால் முருகதாஸ் இந்த முறை தர்பார் கதை வெளியே கசிய கூடாது என்பதில் தீவிரமாக உள்ளாராம்.
பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
தர்பார் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
ஆந்திராவில் அஜித் படத்துக்கு சிக்கல்.!
அண்மையில் மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இம்மாத இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.
தன் படங்களின் கதை ரிலீஸுக்கு முன்பே கசிந்து கதை திருட்டு விவகாரத்தில் சிக்குவதால் முருகதாஸ் இந்த முறை தர்பார் கதை வெளியே கசிய கூடாது என்பதில் தீவிரமாக உள்ளாராம்.
மேலும் படக்குழு யாரும் படத்தை பற்றி வாயே திறக்க கூடாது என கடும் எச்சரிக்கையோடு இருக்கிறாராம்.