Anushka
அனுஷ்கா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தெல்லாம் அவசர புத்தியால் கைவிட்டு போயுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளர் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா, உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த இவர் தற்போது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கி விட்டார். அனாலும் சொல்லி கொள்ளும்படியான வாய்ப்பில்லை.

இது ஒரு புறம் இருக்க அனுஷ்கா தன்னுடைய அவசர புத்தியால் சேர்த்து வைத்திருந்த சொத்தையெல்லாம் இழந்துள்ளார்.

ஆம், இவர் ஐதராபாத்தில் 4 பெட் ரூம் பிளாட் ஒன்றை வாங்கி வைத்திருந்த அனுஷ்கா தெலுங்கானா பிரச்சனையால் சொத்து மதிப்பு இழந்து விடும் என கேப்பார் பேச்சை கேட்டு கொண்டு வெறும் ரூ 5 கோடிக்கு அந்த பிளாட்டை விற்றுள்ளார். இன்று அதன் மதிப்பு ரூ 10 கோடிக்கும் அதிகமாம்.

சரி இதோடு நிறுத்தாமல் ரியல் எஸ்டேட் பிஸினஸிற்காக விசாகப்பட்டினத்தில் நிலவங்களை வாங்கி வைத்திருந்துள்ளார் அனுஷ்கா. ஆந்திர முதல்வர் அமராவதியை தலைநகராக்க முயற்சி செய்த போது இந்த நிலங்களின் விளையும் ஏறாது என எண்ணி அதையும் பாதி விலைக்கு விற்றுள்ளார்.

ஆனால் இன்று விசாகபட்டினங்களில் உள்ள நிலங்களும் எக்கச்சக்கமான ரேட்டுக்கு செல்கிறதாம், பாவம் தன்னுடைய அவசர புத்தியால் அனுஷ்கா எல்லாத்தையும் இப்படி இழந்துட்டாரே என வருத்தப்படுகிறது டோலிவுட் வட்டாரம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.