Anna Statue Issue in Kanyakumari
Anna Statue Issue in Kanyakumari

Anna Statue Issue in Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு இன்று அதிகாலை மர்மநபர்களால் குப்பையை கொட்டி, காவி துண்டை போட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே பரபரப்புடன் காட்சி அளித்துள்ளது.

சமீபகாலமாகவே சமூகத்திற்கு தொண்டாற்றிய தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு காவி துண்டு அணிவிக்கும் ஈனச் செயல்களை மர்ம நபர்கள் செய்து வருகின்றனர்.

புதுவையில் எம்ஜிஆர் சிலைக்கும், திருவள்ளுவர் பெரியார் ஆகியோரின் சிலைக்கும் காவித் துணி அணிவித்து, இழிவான செயல்களை கடந்த சில நாட்களாகவே செய்து வருகின்றனர்.

மூடிட்டு கிளம்பு, இப்போ இது தேவையா? பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படத்தால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – இதோ இதை நீங்களே பாருங்க.!

தற்பொழுது கன்னியாகுமரியிலும் அண்ணா சிலையை களங்கப்படுத்தி உள்ளனர். இதை அறிந்த போலீசார் அந்த இடத்தில் உள்ள குப்பையையும், காவி துண்டையும் அகற்றியுள்ளனர். இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட நபர் யார்? என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசு, இதற்கு தக்க நடவடிக்கை எடுத்தால் தான், இனி வரும் காலங்களில் எந்த ஒரு தலைவரையும் களங்கப்படுத்தும் எண்ணம் யாருக்கும் வராது.