Anitha Statement About Father Death

இறப்புக்கு காரணம் மாரடைப்பு இல்லை என தந்தையின் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத்.

Anitha Statement About Father Death : பிரபல எழுத்தாளராக 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் கே சி சம்பத். இவரின் மகள் தான் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

அனிதா சம்பத் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீஸனில் பங்கேற்றார்.

கடந்த வாரம் தான் இவர் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது இன்று அவருடைய தந்தை மரணம் அடைந்து விட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியானது. மேலும் அவருக்கு மாரடைப்பு எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அனிதா சம்பத் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது அப்பாவை நான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு பார்த்தேன்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு கூட அவரை பார்க்க முடியவில்லை பேசவும் முடியவில்லை. அவர் சீரடி கோவிலுக்கு சென்று இருந்தார் அவருடைய தொலைபேசி ரீச்சாகவில்லை.

இப்படியான நிலையில்தான் இன்று அப்பா இறந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. இன்னமும் கூட என்னால் நம்ப முடியவில்லை.

அப்பாவுக்கு மாரடைப்பு இல்லை. அவருக்கு அல்சர். அவர் இரண்டு தினங்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்து உள்ளார்

அப்பா நீ நடந்து வீட்டுக்கு வாப்பா உன்ன பாக்கணும் உன் கூட பேசணும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இனி என்னப்பாவை பார்க்க முடியாது உங்களது பெற்றோர்களை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வாரம் எவிக்ட் ஆகாமல் இருந்திருந்தால் அப்பா முகத்தைக் கூட பார்த்திருக்க முடியாது. நடக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உள்ளது.

விஜய் டிவி ஷோ எப்போ வேணாலும் வரும். ஆனால் என் அப்பா இனி வரமாட்டார் என கூறியுள்ளார். தன் தந்தையின் உடல் நாளை சென்னை வந்தடையும் எனவும் அனிதா சம்பத் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அனிதா சம்பத்தின் பதிவை பார்த்த ரசிகர்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.