பிக் பாஸ் ஒன்றும் குக் வித் கோமாளி கிடையாது என பேசியுள்ளார் அனிதா சம்பத்.
Anitha Sampath Reply to Haters : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. டைட்டில் வின்னர் ஆக ஆரியும் ரன்னராக பாலாஜி முருகதாசும் இடம்பெற்றிருந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அனிதா சம்பத். பிக்பாஸ் முடிந்த பிறகு பெண் போட்டியாளர்களை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் ஒரு கேம் ஷோ மட்டும் தான். அங்கு இருக்கும் சூழலில் ஒரே மனநிலையில் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான் உணர்ச்சி வசப்பட்டோம். அதுவும் நிரந்தரம் இல்லை.
பிக்பாஸ் முடிந்த பிறகு அவர்களுக்கு அந்த சூழ்நிலை இருக்காது மன நிலை மாறிவிடும். தவறை திருத்திக் கொண்டு மாற்றிக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அனைவரையும் சந்தோஷமான மனநிலையில் வைத்திருக்க இது ஒன்றும் “குக் வித் கோமாளி” ஷோ கிடையாது. என்றும் பேசியுள்ளார்.
இது போன்ற செயலை மீண்டும் யாரும் செய்ய வேண்டாம் என்றும் இதனால் போட்டியாளர்களின் மனதில் மன அழுத்தம் ஏற்படும் என்றும் அனிதா சம்பத் உருக்கமாக பேசியுள்ளார்.