Anitha Sampath About Chithra Death

சித்ராவின் மரணம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்.

Anitha Sampath About Chithra Death : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் ஹேம்நாத் உடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் அனிதா சம்பத். இவர் வெளியேறிய சில நாட்களிலேயே இவருடைய தந்தை காலமானார். அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தன் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் மெசேஜ் அளித்து வருகிறார்.

அதில் ஒருவர் மறைந்த நடிகை சித்ராவை குறித்து கேட்டபோது அனிதா சம்பத் பதிலளித்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் அந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், சித்ராவை நேரில் பார்த்ததில்லை ஆனால் அவரின் மரணம் பற்றி கேட்டதும் மிகவும் மனம் உடைந்தேன். என உருக்கமாக பேசியுள்ளார் அனிதா சம்பத்.