சுஷாந்தை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Anchor Priya Jenuja Passes Away : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுஷாநத் வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தாலும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாலும் மும்பையில் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அவரது மரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்களும் திரையுலகமும் இன்னும் மீளவில்லை.
இந்த நிலையில் 24 வயதே ஆன இளம் தொகுப்பாளர் பிரியா ஜெனிதா தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் என அனைவருடனும் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் தன்னுடைய அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது உடலை சடலமாக மீட்டெடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர் தற்கொலை குறித்து வீட்டில் எந்த ஒரு கடிதமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இவர் பாடகர் கைலாசை பேட்டி எடுத்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. மேலும் இவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.