அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது ரயில் விபத்தில் 60 பேர் பலி ஆகினர்.
பஞ்சாப் , அமிர்தசரஸில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, ” ரயில் விபத்தில் 60பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாய் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
மேலும், மக்கள் பண்டிகைகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் கொண்டாட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.