தல அஜித் வலியால் துடிக்கும் போதும் செய்த செயல் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் பிரபல நடிகரான ராஜ்கிரண்.
தமிழ் சினிமாவில் 1980-களில் ஹீரோவாகவும் தற்போது குணசித்ர வேடங்களிலும் நடித்து வருபவர் ராஜ்கிரண். முனி போன்ற படங்களில் இவரது நடிப்பை கண்டு மிரளாதவர்களே இருக்க வாய்ப்பில்லை.
இவர் தல அஜித்துடன் சேர்ந்து கிரீடம் படத்தில் நடித்திருந்தார். அப்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அஜித் நிறைய ஆபரேஷன் நடந்திருப்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய வலியால் அவதிப்படுவாராம். கிரீடம் ஷூட்டிங்கில் ஷாட்டை முடித்து விட்டு உட்காராமல் நடந்து கொண்டே இருப்பார். வலியை சமாளிக்க தான் இப்படி செய்கிறார் என்பது எனக்கு புரிந்தது.
தயாரிப்பாளரிடம் ஓய்வெடுக்க அவகாசம் கேட்கலாமே என நான் கூறினேன். நீங்கள் நேரில் பார்க்கிறீர்கள், உங்களுக்கு புரிகிறது. ஆனால் தயாரிப்பாளர் பாலாஜி சென்னையில் உள்ளார். அவருக்கு எப்படி புரியும்.
அதுவும் இல்லாமல் மற்றவர்கள் என்னால் தான் தாமதமானது என பேசுவார்கள். அதற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன் என கூறியதாக கூறியுள்ளார்.