Ajith & Bala Issue : நான் கடவுள் பிரச்சனையில் அஜித்துக்கும் பாலாவுக்கு இடையே நடந்த பிரச்சனை தான் என்ன? அந்த ஹோட்டல் அறையில் என்ன தான் நடந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் பாலா இயக்கத்தில் நான் கடவுள் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதன் பின் அஜித்தை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டு ஆர்யாவை வைத்து படம் இயக்கி இருந்தார் பாலா. அஜித்தை ஏன் நீக்கினார்கள்? இவர்களுக்கு இடையே நடந்த பஞ்சாயத்து என்ன என்பது இன்று வரை தெரியாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கூறியிருப்பவதாவது, ஹோட்டல் அறையில் பாலா, தேனப்பன், அன்பு செழியன் ஆகியோர் இருந்தனர்.
அஜித்தை படத்தில் கமிட் செய்து விட்டு பாலா படத்தை தொடங்காமலே இருந்து வந்தார். இதற்கிடையில் அஜித் இரண்டு படங்களை நடித்து விட்டார்.
ஆனால் பாலா தரப்பில் இருந்த்து எந்த பதிலும் வரவில்லை, திடீரென ஒரு நாள் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் மட்டும் வந்தது.
அதன் பின்னர் அஜித் தான் சம்பளமாக வாங்கிய ரூ 1 கோடி பணத்தையும் திருப்பி கொடுக்க ஒப்பு கொண்டார். ஆனால் பாலா வட்டியுடன் வேண்டும் என அஜித்துடன் சண்டையிட்டார்.
அதன் பின்னர் அஜித் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் உங்களுக்கு என்ன பணம் தானே வேண்டும்.. என கூறி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு வெளியேறினார் என கூறியுள்ளார்.