AIADMK Meeting in Chennai

மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க அதிமுக புதிய வியூகங்களை வகுத்து உள்ளது.

AIADMK Meeting in Chennai : தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2021 இல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் எடப்பாடியில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என இருவருக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து ஜெயலலிதா மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் அதிமுக செய்த சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி செய்யும் எனவும் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கேபி முனுசாமி வைத்தியலிங்கம் போன்றோரும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வதற்கான யுக்திகளை பேசினர்.

மூன்றாவது முறையாக தேர்தலில் ஆட்சியை பிடித்து அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்க வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.