14 வருடங்களுக்கு பிறகு சிம்பு மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Again Simbu Plan to Director Movie : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு. பன்முகத் திறமைகள் கொண்ட டி ராஜேந்திரனின் மூத்த மகனான இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் சில படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் பிரச்சனையால் நீண்ட நாட்களாக சிம்பு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனால் சிம்பு ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே மன்மதன் வல்லவன் ஆகிய படங்களை இயக்கிய சிம்பு மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.
சிந்து 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க ஆயத்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வல்லவன், மன்மதன் போன்ற படங்களைப் போல ஒரு மாஸான படத்தை இயக்குமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.