பிகில் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக நடிகர் விஜய் பேசிய விவகாரம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ADMK Minister kadambur raju comment on vijay talk – நேற்று நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ‘சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீது, பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள்.
யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என அதிமுக அரசை மறைமுகமாக சாடினார்.
அதாவது, பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை என்பதை மனதில் வைத்தே விஜய் பேசியதாக தெரிகிறது.
அதேபோல், யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமியின் அரசையே விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்…விழாவில் பேசிய விஜய்.. ஆனால் நடந்தது இதுதான்…
இதுபற்றி செய்தியாளர்களிடம் பதிலளித்த அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘நடிகர் விஜய் யாரை கேட்டு பேசுகிறார் என்பது தெரியவில்லை.
அவரின் பேச்சை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தனது படங்களை ஓட வைக்க தெரியாமல் அப்படி பேசியிருப்பார்.
முதல்வரிடம் அவரை பேசவைக்க வில்லை எனில் சர்கார் படமே வெளியே வந்திருக்காது.
இது அவரின் மனசாட்சிக்கு தெரியும். மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளனர்’ என தெரிவித்தார்.