உயிருடன் இருக்கும் தமிழ் நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actress Vindhya Controversy Poster : தமிழ் சினிமாவில் 1990களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் விந்தியா. இவர் தற்போது அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையை கிளப்பிய இந்த போஸ்டர்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு யாராலும் எண்டு கார்டு போட முடியாது. இது போன்ற போஸ்டர்களால் ஆயுள்தான் கூடும் என கூறியுள்ளார் விந்தியா.