போலீஸ்காரர் ஒருவரை நம்பி ஏமாந்து உள்ளார் நடிகை ராதா.

Actress Radha Complain on Police : தமிழ் சினிமாவில் சுந்தரா டிராவல்ஸ், கேம், அடாவடி உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்தார் ராதா. தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தன்னுடைய மகன் மற்றும் தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்னொரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் வசந்தராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே தாலி கட்டிக்கொண்டு குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர்.

ஆனால் வசந்த ராஜா தொடர்ந்து நடிகை ராதாவை சந்தேகப்பட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ராதா விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வசந்த் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னர் புகாரை விசாரித்த போது வசந்த குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தனக்கு திருமணம் ஆனதை மறைத்து நடிகை ராதாவை ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்தியுளளார் என்பது அம்பலமாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.