திருமணமான நடிகையுடன் தன்னுடைய கணவர் கள்ள தொடர்பு வைத்து கொண்டிருப்பதாக பரபரப்பான குற்றசாட்டை முன் வைத்துள்ளார் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ.
தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவருக்கு தேவதையை கண்டேன் பெரியார் நடிகர் ஈஸ்வருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மியுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு வருவதாகவும் என்னையும் நானும் குழந்தையும் இருக்கும் போதே அவருடன் கண்டபடி பேசுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னிடம் விவாகரத்து கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாகவும் கூறியுள்ளார். குடிக்கு அடிமையான இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடன் வாங்கி அனைத்தையும் அழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அந்த கடன்களையும் தற்போது நான் தான் கட்டி வருகிறேன் என கூறியுள்ளார். மஹாலக்ஷ்மிக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.