8 வருடத்திற்கு பிறகு நடிகை ஜெனிலியா ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actress Genelia Re-entry : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர் ஜெனிலியா. இவர் தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
பிரபல பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஜெனிலியா.
ஒரே படத்தில் ரி-என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன், ஸ்ரீ திவ்யா – ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?
மேலும் இவர் படங்களில் நடித்து எட்டு வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதுவும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி படத்தில் இவர் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.