பாளையத்தம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்த திவ்யா உன்னியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் வேதம், சபாஷ், பாளையத்தம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் திவ்யா உன்னி. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் இவர் கடந்த 2002-ம் ஆண்டு சுதிர் சேகரன் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது.
ஆனால் திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாததால் முதல் கணவரை விவாகரத்து செய்த திவ்யா கடந்த 2008-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
தற்போது இவர் மூன்றாவது முறையாக கற்பமாகியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தான் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.