Actress Andrea : நடிகையும் பாடகியான ஆண்ட்ரியா மாலில் பாட்டு பாடி ரசிகர்களிடம் பணம் வாங்கியுள்ளார். இதற்கான காரணம் பலரையும் கலங்க வைத்துள்ளது.
சன் டிவியில் விஷால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி சன் நாம் ஒருவர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வருவது வழக்கம். அப்படி கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படும்.
அந்த டாஸ்கால் பணத்தை சம்பாதித்து வறுமையில் வாடும் ஒரு குடும்பத்திற்கு உதவி செய்து வருகின்றனர். அப்படி இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா கலந்து கொள்ள உள்ளார்.
அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மாலில் பாட்டு பாடி கையில் ஒரு கூடையை வைத்து கொண்டு ரசிகர்களிடம் பணம் வாங்க வேண்டும்.
இந்த வாரம் ஒரு பார்வையற்ற சிறுவனுக்காக ஆண்ட்ரியா மாலில் பாட்டு பாடி அதனை அந்த சிறுவனின் குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்.
ஆண்ட்ரியா பாட்டு பாடி பணம் வாங்கியதை பார்த்த அந்த சிறுவனின் தாயார் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவரை ஆண்ட்ரியா சமாதானம் செய்துள்ளார்.
ப்ரோமோ வீடியோ இதோ
Join @andrea_jeremiah as she becomes the ray of hope for a blind child. #SunNaamOruvar, this Sunday at 9.30pm on #SunTV. #AnbaiVidhaippoma @VishalKOfficial pic.twitter.com/Ce3e5wQW46
— Sun TV (@SunTV) October 26, 2018