Actress Akshara Gowda Interview Speech
Actress Akshara Gowda Interview Speech

துப்பாக்கி படத்தில் நடித்ததில் எனக்கு விருப்பம் இல்லை வருத்தம் தான் என பிரபல நடிகை கூறியுள்ளார்.

Actress Akshara Gowda Interview Speech : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த படங்களில் ஒன்று துப்பாக்கி.

தளபதி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்த இந்த படத்தில் அக்ஷரா கவுடா என்பவர் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

துப்பாக்கி படத்தில் நடித்ததால் விஜய் முருகதாஸ் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோரின் நட்பு கிடைத்தது சந்தோஷம். ஆனால் அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் என்ன இருக்கு?? அது எனக்கு வருத்தம் தான் என கூறியுள்ளார்.

மேலும் ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்தது நல்ல அனுபவம். அவர் எனக்கு நிறைய டிப்ஸ்களை கூறியிருந்தார். ஆனால் ஆரம்பம் படம் ரிலீசாகும் வரை அஜித்துடைய பவர் பற்றி தெரியாது என கூறியுள்ளார்.

மகனுடன் சேர்ந்து இரண்டாவது கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த் – புகைப்படத்துடன் இதோ

சினிமாவைத் தாண்டி நிறைய விஷயங்கள் அஜித்திற்கு தெரியும் என கூறியுள்ளார்.

விஜய் ஷர்ட் இல்லாமல் இருந்தால் அழகாக இருப்பார் என கூறியுள்ளார். விஜய் சேதுபதியுடன் உணவருந்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் சூர்யா மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும் அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

அக்ஷரா கவுடா தமிழில் உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.