பிக்பாஸ் போட்டியாளர்கள் அபிராமி மற்றும் சாக்ஷி குறித்து அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மதுமிதா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? பிக் பாஸின் முகத்திரையை கிழித்த மது.!
Actres madhumitha blame abirami and sakshi -பிக்பாஸ் வீட்டில், தண்ணீர் பாட்டிலை குழந்தையாக பாவித்து பேசிவந்த அபிராமியிடம் எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் கலாச்சாரம் எனப்பேசி தாறுமாறாக சண்டை போட்டவர் மதுமிதா. அதன்பின், தற்கொலைக்கு முயன்று அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் மதுமிதா அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் அபிராமி எந்த உள்ளாடையும் அணிய மாட்டார். டிரான்ஸ்ப்ரண்டான ஆடைகளை அணிந்தே அங்கும் இங்கும் வலம் வருவார். கலாச்சரத்தை மதிக்கும் ஒரு தமிழ் பொண்ணாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல், சாக்ஷி உள்ளாடை போன்ற ஆடைகளை மட்டுமே அதிகம் அணிந்திருப்பார் என மதுமிதா கூறினார்.
மதுமிதாவின் புகாருக்கு அபிராமியும், சாக்ஷியும் என்ன பதில் கூறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.