திருமண விழாவில் தளபதி விஜயை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கடுப்பேற்றியதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
Actor Vijay Memories : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய தந்தை எஸ் ஏ சி மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய உழைப்பால் இன்று உச்சம் தொட்டுள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் பற்றி கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அனைவரிடமும் அன்பாகப் பேசி நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தயாரிப்பாளர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவ்வளவு தான் விஜய் செம கடுப்பாகி விட்டார். அதோடு அமைதியாகி விட்டார். அவர் வேறு யாரிடமும் எதுவும் பேசவில்லை என கூறியுள்ளார்.
நீருக்கு அடியில் திருமண நாளை கொண்டாடிய சினேகா, பிரசன்னா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஆனால் அந்த பத்திரிக்கையாளர் விஜய் எந்த தயாரிப்பாளரால் இப்படி கடுப்பானார் என்பதை தெரிவிக்கவில்லை.
இருப்பினும் விஜய்யை கடுப்பேற்றிய தயாரிப்பாளர் யார் என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.