அஜித் விஜயிடம் வாய்ப்பு கேட்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என வையாபுரி உருக்கமாக பேசியுள்ளார்.
Actor Vaiyapuri Emotional Speech : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வையாபுரி. அஜித் விஜய் சூர்யா என பெரும்பாலான நடிகர்களுடன் கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனிலும் கலந்து கொண்டார்.
பிக் பாஸுக்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் இவர் அஜித், விஜய் என பலரிடம் வாய்ப்பு கேட்டு உள்ளார்.
ஆனால் அவர்கள் நிச்சயம் அடுத்த படத்தில் பார்க்கலாம் என கூறுகிறார்கள். அதன்பின்னர் அதை அப்படியே மறந்து விடுகிறார்கள்.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்தவர். அவருடன் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. ஆனால் அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்ற போது என் கண்முன்னே பல இயக்குநர்களுக்கு போன் செய்து வையாபுரி அண்ணாவுக்கு வாய்ப்பு கொடுங்க என சிபாரிசு செய்தார்.
அஜித்தா? விஜயா? ரியல் சூப்பர் ஸ்டார் யார்? – காஜல் அகர்வால் ஓபன் டாக்.!
உயிருடன் இருக்கும்போது தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கொடுங்கள், இறந்து போன பிறகு இரங்கல் தெரிவிக்காதீர்கள். எங்களைப் போன்ற கலைஞர்களை ஏன் ஒதுக்குகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
எனக்கு நடிக்க மட்டும்தான் தெரியும். வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. நாங்கள் பணம், பொன் கேட்டு வரவில்லை. வாய்ப்பு கேட்டு தான் வருகிறோம் என மிகவும் உருக்கமாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.