Actor Rajini talks
Actor Rajini talks

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த, கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். பின்னர் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினி, “சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் நடிகர் கமல்.

களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று பெருமையுடன் தெரிவித்தார். மேலும் நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் கமல் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் ‘உலகநாயகன்’ என்றும் குறிப்பிட்டார்” .

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் குறித்து பேசிய ரஜினிகாந்த், ” தான் முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்… மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் அன்று கூறினார்கள்.

ஆனால் அற்புதம் நடந்தது..! அனைத்து தடைகளையும் மீறி இன்றுவரை ஆட்சி தொடர்கிறது. இது மாதிரியான அதிசயம் நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளையும் நடக்கும்..” என தெரிவித்தார். பிறகு கமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது என்று கூறினார்.

மேலும் எங்கள் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது எனவும் ரசிகர்களை கேட்டுக்கொண்டார் நடிகர் ரஜினி. மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது குறிப்பிடத்தக்கது.