நான்கு வருடங்களுக்குப் பிறகு நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actor Karthi Upcoming Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றனர்.
இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் மாபெரும் வேட்டையாடிய படமாக அமைந்தது.
இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் காஷ்மோரா படத்திற்கு பிறகு அதாவது நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி மீண்டும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவி இருந்தது.
இருந்தாலும் பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.