நடிகர் வடிவேலு யாரையும் வளர விட மாட்டார் என சிங்கமுத்து வைத்து தொடர்ந்து இன்னொரு காமெடி நடிகர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Benjamin Talk About Vadivelu : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தற்போது இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் பிரச்சனையால் படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிங்கமுத்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் வடிவேலு யாரையும் வளர விட மாட்டார். நான் சந்தானத்துடன் நடித்த போதே அவனுக்கு நம்முடைய சிகரெட்டை சொல்லிக் கொடுக்காதே என கூறியதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் ரசிகர்கள் ஏற்கனவே வடிவேலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவ்வாறு பேசியதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது திருப்பாச்சி வெற்றிக்கொடிகட்டு போன்ற படங்களில் நடித்த பெஞ்சமின் அவர்களும் வடிவேலுவை பற்றி பேசியுள்ளார்.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வெற்றி கொடி கட்டு படத்தில் வடிவேலுவை நான் திட்டுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அப்போது என்னை கேவலமாக பார்த்தார். என்னைத் திட்டி விட்டு நீ சினிமாவில் இருந்து விடுவாயா என கூறினார்.
அதன் பின்னர் அந்த காட்சியை அவர் இல்லாமல் எடுத்து இணைத்துக் கொண்டோம் என கூறியுள்ளார். வடிவேலுக்கு அவருடன் இருப்பவர்கள் வளர்வது பிடிக்காது என பேசியுள்ளார்.
சிங்கமுத்துவை தொடர்ந்து நடிகர் பெஞ்சமின் அளித்துள்ள பேட்டியிலும் வடிவேலுவை பற்றி இவ்வாறு பேசியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வடிவேலு வாய் திறந்தால் தான் சொன்னால் என்ன என்பது தெரிய வரும்.