படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டது ஏன் என அப்பாஸ் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
Abbas About Her Cinema Carrier : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். 1990-களில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
ஆனாலும் இவர் பெரும்பாலான படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார். இறுதியாக திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தின் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.
இருந்தும் தற்போது நடிகர் அப்பாஸ் எந்தவித படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். தற்போது இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டது ஏன் என பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது என்னை கவரும் வகையில் கதை எதுவும் அமையவில்லை. அதுமட்டுமில்லாமல் நடிப்பது போரடித்து விட்டது. அதனால் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். தற்போது தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறேன் என கூறியுள்ளார்.