தமிழர்களின் தீபாவளிக் கொண்டாட்டம் அறிவியலுக்கு எதிரானது என பேசியுள்ளார் திமுகவை சேர்ந்த ஆ ராசா.
A Rasa Speech About Diwali : தமிழகத்தில் திராவிட கட்சியாக வலம் வருவது திமுக. இவர்கள் இந்து கடவுள் நம்பிக்கைகள் பொய் என பெரியாரின் கூற்று படி அரசியல் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே திமுகவின் ஆதரவாளரான சுப வீரபாண்டியன் தீபாவளி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படியான நிலையில் ஆ ராசா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தீபாவளி பண்டிகை வரலாறு குறித்து பேசி இதற்காக தான் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என பேசியுள்ளார்.
மேலும் புரூனோ என்னும் கிறிஸ்துவர் பூமி தட்டையானது என கூறினார். ஆனால் அவர் கூறியது படி பைபிளில் இல்லை என்பதால் கிறிஸ்துவர்கள் அவரை எரித்து கொன்றார்கள்.
அதன் பின்னர் பூமி தட்டையானது என நிரூபிக்கப்பட்டதும் அவரை எரித்த இடத்திலேயே கிறிஸ்துவர்கள் அவருக்கு சிலை வைத்தார்கள். செய்த தவறை திருத்திக் கொள்ளும் பக்குவம் கிறிஸ்துவத்தில் உள்ளது. ஆனால் இந்து மதங்களில் அது இல்லை எனப் பேசியுள்ளார்.
இவர் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் பண்டிகை பற்றி திமுகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.