4 Wheeler Banned in Mamallapuram :
மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இன்று காலை முதல் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் வருகிற 12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
எனவே இவ்விரு தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் நகரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு.!
மேலும் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பொதுமக்களும் மாமல்லபுரம் நகரத்திற்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் நுழைவாயிலிருந்து நடை பயணமாக செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
அதும்மடுமின்றி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் வரவும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதன் காரணமாக, மாமல்லபுரம் நகரத்திற்குள் இருந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக, மாமல்லபுரம் நகரத்திற்குள் செல்லும் வாகனங்களையும் போலீசார் முழு சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
இதுமட்டுமின்றி, பிரதமர்- சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளது.
ஐந்து ரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டைபாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன.