Job Offer to 1 Lakh People in Tamilnadu : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை திறம்பட செயல்படுத்தி தமிழகத்திற்கு நல்லாட்சியை வழங்கி வருகிறார்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை கூட தமிழக அரசு பெற்றிருந்தது.
மேலும் தமிழக முதல்வர் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அன்னிய முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்களை தொடங்க வழிவகை செய்து வருகிறார்.
இதன் காரணமாக ஓசூரில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சிறு, குறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஓசூர், சூளகிரி மற்றும் குருபரப்பள்ளியில் மேலும் ஒரு சிப்காட் தொடங்கப்பட உள்ளதால் மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்துள்ளார்.