Watch Full Video : – பட்டியலினத்தவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் – குவியும் பாராட்டுக்கள்.!

Announcement To Devendhira Kula Velalar : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவையறிந்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில்தான் குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் போன்ற 7 உட்பிரிவினர் தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க சட்டதிட்டம் செய்யுமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த ஏழு பட்டியலினத்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மக்களவையில் இதுகுறித்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த 7 உட்பிரிவுகளை சேர்ந்த மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இனி குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.