மாநாடு படம் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பது போல் தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இந்த படம் கைவிட பட்டது.
இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வாரத்தையெல்லாம் நடந்து சிம்பு இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் தற்போது ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ள சிம்பு சபரி மலை சென்று வந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சுரேஷ் காமாட்சி அளித்துள்ள பேட்டி ஒன்றில் மீண்டும் சிம்புவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என கூறியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.